6 டிச., 2012

மெல்லிய மலர்கள்...




இரவோடு உலாப்போன 
மேகம் எழுதிய கவிதைகளை 
மறைக்கமுடியவில்லை 
மலர்கள் மேல் 
மழைத்துளிகள்...
==============================
கொட்டியது மழை 

மரணிக்கவில்லை 
ஜனித்தது
மெல்லிய மலர்கள்...
===============================
இரவு  தூறிய தூறலை 
மண்ணும்
மலரும் 
காட்டிக்கொடுத்தது...
===============================

உன்னை நனைத்தாலும் 
நனைத்த துளி 
விழுந்ததாலும்

மழைக்கும் 
மலருக்கும் 
பெருமிதம் ....
==============================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக