6 அக்., 2012

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை, அக் 6-காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்-
பொன்.ராதாகிருஷ்ணன்

பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதாவில் இணையும் விழா மேற்கு மாம்பலத்தில் இன்று நடந்தது. திருச்சி, தஞ்சை, விருது நகர், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., தே.மு.தி.க.வை சேர்ந்த 200 பேர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தனர். விடுதலை சிறுத்தை முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆர்வலனும் அந்த கட்சியில் இணைந்தார். அவர்களை மாநில பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை தொடர் பிரச்சாரங்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்று அங்குள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாநில அரசு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டவும், சுமூக தீர்வு காணவும் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன், செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், கே.பி. ராகவன், ரவிச்சந்திரன், டால்பின் ஸ்ரீதர், தென் சென்னை மாவட்ட செயலாளர் திருப்புகழ், ஆறுமுகராஜ், செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ். பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி மாலைமலர் ...

கருத்து உங்கள் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் நீங்களே நேரில் பேசி வாங்கி  தரவேண்டியது தானே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக