5 அக்., 2012

மின் துறை மந்திரி பங்கேற்ற விழாவிற்கு மின் திருட்டு செய்து வெளிச்சம் ( படங்கள் )


















திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற அதிமுக தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.பி.சீனிவாசன் தலைமையில் இக்கூட்டம் நடை பெற்றது . இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதன், மற்றும் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், முனுசாமி உள்பட எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட பொருப் பாளர்கள் பங்கேற்றனர்.


இந்த விழாவிற்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன. இதற் கெல்லாம் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து உபயோகம் செய்யப்பட்டது. கண்துடைப்புக்காக 2 ஜெனரேட்டர் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.


மின்சார தட்டுப்பாடு இருக்கும் நிலையில் இப்படி மின் துறை மந்திரி ஊரிலேயே அவர் பங்கேற்ற விழாவிற்கே திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.
நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக