10 அக்., 2012

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம்

புதுடெல்லி, அக்.10-

டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இந்த சட்டத்தை மேலும் வலுவாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது. அரசு ஊழியர்களின் நேர்மைத்தன்மையை மிகவும் சிறப்பாக பேணும் வகையிலும், ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அவநம்பிக்கை மற்றும் எதிர்மறையான தன்மைகளுக்கு எதிராக கவனம் செலுத்தவில்லை எனில், ஊழல்களை தடுக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்காது. மக்கள் மத்தியில் அரசு ஊழியர்கள் மீதான நம்பிக்கையின்மை மேலும் அதிகரித்து விடும்.
 மாலைமலர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக