26 செப்., 2012

மண்ணில் உடலை புதைக்கும் போராட்டம்: வைகோ பங்கேற்பு

இடிந்தகரை,செப்.26-


கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் இல்லாத இடங்களில் கல்லறைக்குள் குடிபுகும் போராட்டமும் நடத்தினர்.

இன்று இடிந்தகரையில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை கடற்கரையில் கூடி கடல் மணலில் உடலை புதைத்து போராட்டம் நடத்தினர்.இடிந்தகரை ஆலயம் முன்பு ஒரு பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மதியம் 12 மணிக்கு இடிந்தகரை வந்தார். இடிந்தகரையில் போராட்ட குழுவினரை அவர் சந்தித்து பேசினார். அப்போது உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய வைகோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் வைகோவும் ம.தி.மு.க தொண்டர்களுடன் மண்ணில் உடலை புதைக்கும் போராட்டத்தில் பங்கேற்றார். உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக