24 செப்., 2012

என் வீட்டுக்கே தண்ணீர் வர்றதில்ல...


என் வீட்டுக்கே தண்ணீர் வர்றதில்ல... நான் எங்கப்போய் சொல்றது... பெண்களிடம் கெஞ்சி தப்பித்த அமைச்சர்






வேலூர் மாநகரத்திற்க்குட்பட்ட சின்ன அல்லாபுரத்தில் 23ந்தேதி புதிய ரேஷன் கடை திறப்பு விழாவில் கலெக்டர் சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கலந்துக்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா காலை 11 மணிக்கு என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டது. கலெக்டர் 11 மணிக்கு முன்பே வந்துவிட்டார். அமைச்சரோ 11.30 மணிக்கு சவகாசமாக வந்தார். அதுவரை கலெக்டர் மேடையில் அமர்ந்து செல்போன் வைத்துக்கொண்டு அதில் கவனம் செலுத்திக்கொண்டுயிருந்தார். மற்ற அலுவலர்கள் இதனால் என்ன செய்வது என தெரியாமல் பதட்டத்துடன் இருந்தனர்.
11.30க்கு விழாவுக்கு வந்த கலெக்டரை அப்பகுதி பெண்கள் சுற்றி வளைத்து எங்களுக்கு குடிநீரே வரவில்லை, இதுக்கு பதில் சொல்லுங்க என கேள்வி கேட்டனர். அமைச்சரோ என் வீட்டுக்கே இப்பயெல்லாம் 15 நாளைக்கு ஒருமுறை தான் குடிதண்ணீர் வருது. இத நான் எங்கப்போய் சொல்றது என சமாளிக்க முயன்றார். அப்போதும் பெண்கள் விடாததால் குடிதண்ணீர் பிரச்சனைய தீர்க்க நடவடிக்கைச் எடுக்கச் சொல்றேன் என்றார்.

நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக