26 செப்., 2012

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: கடைகளில் கறுப்பு கொடி

சென்னை, செப். 25-

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலையில் வியாபாரிகள் தங்களது கடைகளில் கறுப்பு கொடிகளை ஏற்றினர்.

சென்னையில் வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோயம் பேட்டில் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் எழும்பூரில் சங்க நிர்வாகிகளுடன் கடை கடையாக சென்று கருப்பு கொடி ஏற்றினார்.

இதில் பொதுச்செயலாளர் மோகன், பாண்டிய ராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் மாரித் தங்கம், சாமுவேல், கே.சி. பாபு, ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் விக்கிரம ராஜா பேசும்போது, அன்னிய முதலீட்டை ஒருபோதும் நுழைய விடமாட்டோம். இதற்காக ஒவ்வொரு வியாபாரிகளும் கடுமையாக போராடுவார்கள். இதன் முதல் கட்டமாக தமிழ் நாட்டில் உள்ள 20 லட்சம் வியாபாரிகள் கறுப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர் என்றார்.

பின்னர் விக்கிரமராஜா சென்னை முழுவதும் சென்று ஒவ்வொரு கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றினார்.

ஆலந்தூரில் பேரமைப்பு துணை தலைவர் ஆலந்தூர் பி.கணேசன் வீதி வீதியாக நிர்வாகிகளுடன் சென்று கறுப்பு கொடி ஏற்றினார். இதல் கதிரேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கொரட்டூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநில துணை தலைவர் கொரட்டூர் ராமச்சந்திரன் கொடி ஏற்றினார். இதில் தலைவர் முருகேசன், செயலாளர் கோபால் ராஜ், பொருளாளர் வெங்கடேசன், கார்மேகம் பங்கேற்றனர்.

வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தலைவர் ஜெயபால் தலைமையில் அம்பத்தூரில் கறுப்பு கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மாநில பொதுச் செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் முகமது, பொருளாளர் தங்கதுரை, முகமது ஷெரீப், காசிராஜன், காவேரிமீரான், பிச்சைமணி, விஜயகுமார் பங்கேற்றனர்.

ஆவடி பெருநகராட்சி வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் 1000 கடைகளில் கறுப்புகொடி ஏற்றப்பட்டது. கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம்.துரைராஜன், பொதுச் செயலாளர் அய்யன் பவன் அய்யாதுரை, பொருளாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் தங்கதுரை, திருமாறன், முத்து, வெள்ளானூர் மாறன், ரமேஷ், மாதவன், சீனிவாசன் பங்கேற்றனர்.

தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன், பல்லாவரம், கந்தன்சாவடி, குன்றத்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கண்ணகிநகர், ஒக்கியம் பேட்டை, கொட்டிவாக்கம், அடையார் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளில் கறுப்பு கொடி ஏற்றினார்.

பல்லாவரத்தில் ராமச்சந்திரன், ஜெயபாண்டியன், செல்வராஜ், ராஜ்பத்ம நாபன், ரமேஷ், கோமஸ் பங்கேற்றனர்.

குன்றத்தூரில் சீனிவாசன், சி.எம்.சாமி, ரத்னவேல், அடையாறில் பாஸ்கர், செந்தில் ஆறுமுகம், பாலசுப்பிரமணி, பி.டி.சேகர் ஆகியோரும், கந்தன் சாவடியில் கோவிந்தராஜ், சண்முகம், வின்சென்ட், கார்த்திகேயன் ஆகியோரும், ஆதம்பாக்கத்தில் செல்வ குமார், தேசிகன், சின்னவன் ஆகியோரும், கொட்டி வாக்கத்தில் முத்துமாலை, ஹிலால், கணேஷ் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கண்ணகிநகரில் மைக்கேல்ராஜ், காமராஜ், முனுசாமி ஆகியோரும், மீனம்பாக்கத்தில் ராம்ராஜ், கிறிஸ்துவராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக