11 செப்., 2012

வரவேற்பாளரின் புலம்பல்...













அலைபேசி 
கணினிக்குள் 
போராட்டம்...

முகம் தெரியா 
நிலையில் அவசியம் 
சிரித்து பேசும் வேலை...

அழகுக்கும் 
சிரிப்புக்கும் தான் 
இங்கு சம்பளம்...

எனது உடைகள் கூட 
கவனிக்கப்படுகிறது...

மேய்ந்து திரியும் 
கண்களுக்கும் 
மொக்கைப் போடும் 
வாய்களுக்கும் 
இடையில் தான் 
வாழ்க்கை...

சிரித்து பேசி 
ரசிக்க வைக்கும் 
பொம்மையாய் 
நான்...


அட என்ன வாழ்வு 
என்று வெறுக்கும் 
போது 
வறுமை வந்து 
போகிறது...

வேற என்ன செய்ய 
வழக்கம் போல 
சிரித்தே எனது சோகத்தை 
சலவை செய்கிறேன்...!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக