26 ஆக., 2012

யாரங்கே...



இணையத்தில் இதயங்கள் 
இணைந்து  போனதால் 
காதல் காதல் என்று 
கவிதை பாடுகிறதோ?

திரும்பும் திசை எங்கும் 
காதல் பேச்சு 
முச்சு....

சொல்லாத காதலுக்கும் 
சொன்ன காதலுக்கும் 
வென்ற காதலுக்கும் 
தோற்ற காதலுக்கும் 
இணையம் தான் 
ஆறுதல்...

எழுதி கிழிக்காத 
கவிதையாய் 
காதல் இங்கு...

யாரங்கே...
வந்தது தான் வந்துவிட்டீர்கள் 
கொஞ்சம் காதல் கவிதையை 
படித்து விட்டு தான் போங்க 
எழுதிய உள்ளங்கள் 
மகிழ்ச்சியில் குதிக்கட்டுமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக