25 ஆக., 2012

அப்பா...

அம்மா இறந்தாள் 
சுமங்கலியாய் 
பிள்ளைகளுக்கு 
அப்பா இனி 
சுமையாய் ...!
======================

அம்மா இறந்த பின் 
ஒதுக்கப்பட்ட 
ஜடமாய் அப்பா...!

======================

அம்மா இறப்பு 
பேசி பேசி 
கடைசியில் அப்பாவுக்கு 
இடம் முதியோர் இல்லம் 

=======================
கைப்பிடித்து நடை பழகிய 
மகன் சொன்னான் 
கை தடியை நான்றாய் 
பிடித்து நடந்தால் என்ன...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக