20 ஜூலை, 2012

தேர்தல் வழக்கு: விஜயகாந்த் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜூலை. 20- தேர்தல் வழக்கு: விஜயகாந்த் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு 

கடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட ஜெயந்தி என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஜெயந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயந்தி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது வேட்புமனு உரிய காரணம் இல்லாமல் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனக்கு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்தின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விஜயகாந்த் ஒரு பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ஜெயந்தியின் மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும். எனது வெற்றி எந்த வகையிலும் மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக