21 ஜூன், 2012

இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்



குடிபோதையில் வாடகை தரமறுத்தும் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த டிரைவர்


குடிபோதையில் வாடகை தரமறுத்தும் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த டிரைவர்

தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப்பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்து போலீசாரையே மெய்சிலிர்க்க வைத்துள்ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.


ஆட்டோ டிரைவர் என்றாலே சண்டைகார்கள் என்றும் தவறனா நபர்கள் என்றும் சிலரை வைத்து எடைப்போடும் நமக்கு,இது போன்ற மனிதர்களும் ஆட்டோ டிரைவர் போர்வையில் இருக்கிறார்கள் என்பதை நமக்கு அடையாளம் காட்டிய .சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலாஜி தோழருக்கு ஒரு வாழ்த்து சொல்லுவோம்..

சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட்டையில் சவாரிக்காக காத்திருந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக்கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்டணம் பேசி பாலாஜி அவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக்கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இருந்த அந்த நபர் வாடகை தரமறுத்து தகராறு செய்தார்.

சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதாக இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி கட்டணம் வாங்காமலேயே பாலாஜி திரும்பி சென்றார்.

ஸ்டாண்டுக்கு சென்றபிறகு ஆட்டோவில் ஒரு மஞ்சள் பையை பார்த்தார். அந்த பையில் ரூ.95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகார பயணி தவறவிட்டு சென்றதை யூகித்து கொண்ட பாலாஜி வாடகை தரமறுத்ததால் பணத்தை அமுக்க முயலவில்லை.

இன்று காலையில் பணத்தை யானைக்கவுனி போலீசில் ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறினார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை நினைத்து மெய்சிலிர்த்த போலீசார் அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடி கண்டுபிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர் ஆட்டோ டிரைவருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனால் டிரைவர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.


1 கருத்து: