20 பிப்., 2012

குமரி கிழவியாய் ஆகி...


சிறைக்குள்

சில நாட்கள்
பிணையத்தில்
வெளியேவும்
வாய்தாக்களும்
வாங்கப்பட்டு
நடத்தப்பட்டன...


காலங்கள்
வருடமாய் மாறி
குமரி
கிழவியாய்
ஆகி...


ஆராய்ந்து பார்த்ததில்
போதிய ஆதாரமில்லாமல்
போகவே

இவர் குற்றமற்றவர்
என்று கருதி
இந்த மனு
தள்ளுபடி
செய்யப்படுகிறது


சட்டம் தன்
கடமைக்கு உட்பட்டு
எழுதுகோல்
முறிக்கப்பட்ட
நிலையில்
முடித்துக்கொண்டது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக