12 பிப்., 2012

சிரிக்க சிரிக்க சிரிக்க....


==========================================


தொண்டர் 1 :

 "தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரா, எப்படி?"

தொண்டர் 2 :
" சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே, 'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"

==========================================

 "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"

"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"

"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"

"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"

"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"

==============================================

"இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"

"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"

===============================================

 "டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"

"அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"

"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!"

===============================================

தொண்டர் 1:

"தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க என்ன வழி?"

தொண்டர் 2:

 "போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"

==============================================
. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
"என்ன செய்தே?"

" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"

===========================================

3 கருத்துகள்:

  1. எல்லாமே அருமை

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  2. கலை நிலா அண்ணா! தங்களது கடிகள் மிகவும் அருமை! தமிழ் தோட்டம் செல்லாததால் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவுகளை ரசிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. கலை நிலா அண்ணா! தங்களது கடிகள் மிகவும் அருமை! தமிழ் தோட்டம் செல்லாததால் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவுகளை ரசிக்கிறேன்! தங்களுக்கு நேரம் இருந்தால் எனது வலைப்பூவிற்கு விஜயம் தருமாறு அழைக்கிறேன்!//dewdropsofdreams .blogspot .com

    பதிலளிநீக்கு