25 பிப்., 2012

தேர்தல் ஒரு பார்வை!



தேடித் தேடி,வந்து சொன்னார்கள்
தேவைகளை நிறைவேற்றுவதாக,
பொதுத்தேர்தல் !


கேட்டதும் கிடைத்தது,
கேட்காததும் கூட கிடைத்தது,
இடைத்தேர்தல்!

20 பிப்., 2012

பச்சை நிற இலைகள்...



பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,

உறவானது!


மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு
பச்சை நிறம்
அன்னியனானது!

மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு
பச்சை இலை,
வெற்று இலையானது
எதிரியானது!

குளத்தோடு
அதன் குலத்தோடு
இருந்தாலும்
பச்சை இலை
இடைஞ்சலானது.
இன்முகம் மறைகிறது
இன்னமும் தொடருகிறது...

இதன் எதிரொலி!
வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்  கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!

பச்சை இலைகளை
அழித்தாலும்,
எரித்தாலும் எருவாகும்,
மீண்டும் உறவாக
உருவாகும்!

பட்ட மரங்களாய்...



பசுமை பேசிய

பச்சை மரங்களும்
புல் வழிச்சாலைகளும்
மழையோடு மாறுப்பட்டதால்
காய்ந்துப்போன சருகளாய்
பட்ட மரங்களாய்...


எல்லாம் வாழ்க்கையோடு
தன் ரசனையோடு
ஒன்றுபட்டால்
உறவாகவும்...
மாறுப்பட்டால்
மறுக்கப்படுவதும்...
இயற்கைக்கு மட்டுமா...


முதியோர் இல்லம்
தோன்றுவதற்கும்
மாறுப்பட்ட
மறுக்கப்பட்ட
நிலையே காரணம்!


மரத்தை போல
வாழுகின்ற
மனிதர்களால்...

பட்ட மரங்களாய்
காயம்பட்ட உள்ளங்களாய்
இன்னும் இங்கு...

குமரி கிழவியாய் ஆகி...


சிறைக்குள்

சில நாட்கள்
பிணையத்தில்
வெளியேவும்
வாய்தாக்களும்
வாங்கப்பட்டு
நடத்தப்பட்டன...


காலங்கள்
வருடமாய் மாறி
குமரி
கிழவியாய்
ஆகி...


ஆராய்ந்து பார்த்ததில்
போதிய ஆதாரமில்லாமல்
போகவே

இவர் குற்றமற்றவர்
என்று கருதி
இந்த மனு
தள்ளுபடி
செய்யப்படுகிறது


சட்டம் தன்
கடமைக்கு உட்பட்டு
எழுதுகோல்
முறிக்கப்பட்ட
நிலையில்
முடித்துக்கொண்டது...

12 பிப்., 2012

சிரிக்க சிரிக்க சிரிக்க....


==========================================


தொண்டர் 1 :

 "தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரா, எப்படி?"

தொண்டர் 2 :
" சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே, 'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"

==========================================

 "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"

"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"

"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"

"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"

"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"

==============================================

"இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"

"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"

===============================================

 "டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"

"அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"

"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!"

===============================================

தொண்டர் 1:

"தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க என்ன வழி?"

தொண்டர் 2:

 "போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"

==============================================
. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
"என்ன செய்தே?"

" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"

===========================================

சிரிக்க மட்டும்

"டாக்டர் வீட்டுக்குப்போனா அங்க வந்திருக்கற பொம்பளங்கக்கிட்ட வீணா என்ன பேச்சு?"


" "நலம் விசாரிக்கறதுல தப்பு இல்லையேடி....." "


என்கிட்ட என்னிக்கு விசாரிச்சிருக்கீங்க...?
============================================

அப்பா:
"ரேங் கார்ட் எங்கடா?"
மகன்:
"இந்தாங்கப்பா ரேங் கார்ட்"
அப்பா: "
அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"
மகன்:
"சரிடா மச்சான், கையெழுத்து போடு"






7 பிப்., 2012

ஃபீசை குறைக்கணும்"

    . "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"







"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!"



==========================================






2. "அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து அழறாங்களே , ஏன்?"


"அங்கே 'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"


==========================================


3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்"






"அவ்வளவு பிசி ஒர்க்கா?"






"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிடலை"
   
=========================================


4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"






"பாய் வியாபாரம்!"
   
=========================================


5. டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் குறைக்கணும்; காரத்தைக்


குறைக்கணும்"






நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"  


===========================================


சுட்டது சுட்டது சுட்டது சுட்டது
 
http://www.chenaitamilulaa.net/t29590-topic

6 பிப்., 2012

மனமே மந்திர சாவி.



மனம் பேச விரும்பும் போது
பயந்தால், வார்த்தைகள் தடைப்படும்,

எண்ணங்கள் கொலைச் செய்யப்படும்

மனமே மந்திர சாவி.

அறிந்து அதை திறப்பவனே
இவ்வுலகின் ஞானி...

செயலைக் கவனமாகச் செய்!



இன்றைய ஆட்சிக்கு அஸ்திவாரம்,

நேற்றைய தோல்விக்கு,

உதாரணம்!


செய்வதை திருத்தி செய்தால்

வெற்றி உன் பக்கம்,

தோல்வியில் துவண்டு போனால்

வெற்றி எனபது அடுத்தவர் பக்கம்!


வெற்றி பெற்றபின்
தன்னை அடக்கி
வைத்துக்கொள்பவன்
இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்!





தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.



கடி கடி....

நாய்க்கு நாலுகால் இருந்தாலும் 
ஒருக்காலும் அதனால்  மிஸ்டு கால் 
பண்ணமுடியாது.....

=============================
சோப்புக்கள் பல இருந்தாலும் 
ஆண்களுக்கு என்று இருப்பது 
ஒன்று தான் அது எது ?

நீயே சொல்லுப்பா 

வேற எது லைப்பாய் சோப்புதான் 

மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்

சோற்றுக் கற்றாழை




சோற்றுக் கற்றாழை
இது ஒரு 


மருத்தவ நிவாரணி...

இலைச்சாறுகளில் 
ஆந்த்ரோகுயினோன்கள்இ
ரெசின்கள் பாலிசக்கரைடு 
மற்றும்...
ஆலோக்டின்பி’ எனும் 
பல வேதிப்பொருட்கள் உள்ளன.

பெண்களுக்கு என்றும் ராணியாய்,
வரம் தரும் 
அடுக்கு மடல் கொண்ட செடி.

இது ஒருவகை இனிப்பு கூழ்,
இது மூல நோய்க்கும்,
வயிறுப் புண்ணுக்கும்
இலையின் சாறு மருந்தாகும்.

அழகுக்கு 
அழகுச் சேர்க்கும்.
சோற்றுக் கற்றாழை
தாயகம்
தென்னாப்பிரிக்கா 
மற்றும் அரேபிய நாடாகும்...

இதை நாடாமால் போனால்
அரியசெடியை இழந்த நிலையாகும்.

இதன் மருத்துவ குணம் 
அறிந்தும்
இன்னும் நாம் வீட்டில் 
பயிரிட மறுத்ததால்,
இனியும் இல்லாமல் போனால்
நமது இயலாமையைக் குறிக்கும்...

வரும் தலைமுறை சபிக்கும்
இளமைக்கு 
இது தேவை என்றால்
இன்னுமா தயக்கம்...
பயிரிட ஏனப்பா சுனக்கம்?

இதன் மருத்துவம் 
பயன் தரும்.
இளமை தரும்
சோற்றுக் கற்றாழை,
நமக்கு என்றும் சொந்தம்

1 பிப்., 2012

வெத்து வெட்டா ?


வடிவேலு:

அட அரசியலு பேசியது 
ஒரு தவறா 
நான் வேணா கட்சி ,காட்சி மாறி 
விடுகிறேன்:

விஜயகாந்த்:

எனக்கு அரசியலில் புடிக்காத 
வார்த்தை தப்பை தப்பா செய்யாமல் 
இருப்பது தான்...

வடிவேலு :

இதை யாருஎழுதி கொடுத்தது ?

விஜயகாந்த்:

உனக்கு ஐயா ...
எனக்கு அம்மா ...

வடிவேலு :
அப்ப
நம்ம இரண்டு பேரும் சும்மா 
வெத்து வெட்டா ?

சீத்தாப்பழம்...(மருத்துவக்கவிதை)












பல்லுக்கும்
எலும்புக்கும்,
சீத்தாப்பழம் 
சிறப்பு பெரும்,

முடி உதிர்வை தடுக்க,
பலத்தின் விதைப்பொடி
விடைசொல்லும்.

மேலும் 
சிறுபயறு மாவு 
கூட்டணி சேர,
பேன்கள் ஒழிந்துப்போகும்...

முடி மிருதுவாகும்
அழகு சேர்க்கும் வழியில்
சித்தாப்பழம்
தலைமை ஏற்கும்.

இதயம் காக்கப்படும்
பலப்படும்
காசநோயை விரட்ட 
துணை நிறுக்கும்...

பழத்தின்  பலன்களை 
அறிய...
இந்த சீத்தாப்பழம் 
உண்டு வாழ்ந்தால்
உண்மை புரியும்...