25 ஜன., 2012

வெற்றிலை....



வெற்றிலை
இதன் முகவரி மலேசியா!
இது ஒரு மருத்துவ மூலிகை!


தமிழர்களின் 
கலாச்சாரத்தோடு
இணைந்து
மங்கள காரியத்தில்,
முகமலர்ச்சியோடு
வரவேற்பதில்
இதன் முக்கிய நிலை!


விதைகள் இல்லாத 
கொடித்தாவரமே 
இந்த வெற்றிலை!
இதன் காம்புகளை
வெட்டி பதியம் போட்டாலே 
வளரும் இந்த இலை !


கரும் பச்சையை 
ஆண்ணென்றும்,
இளம் பச்சையை
பெண்ணென்றும்,
வெற்றிலைக்கு 
உறவுண்டு...
இல்லற நல் உறவுக்கும்
இதில் பங்குண்டு!


கால்சியம்
இரும்பு 
நீர்சத்து,புரதம்,
கொழுப்பும் 
கலந்திருக்கு...

சவிக்கால் 
என்ற வீரியமும்
நிறைந்து இருக்கு...


வெற்றிலையோடு 
பாக்கும்,
சுண்ணாம்பும் 
கலந்தால்,
வாய் சிவக்கும்
நாற்றத்தை விரட்டும்
உண்ட உணவு
 
ஜீரணமாகும்!


வெற்றிலை .
இது வெற்றி இலை
மருத்துவத்தில்
மகத்துவம் கொண்ட,
உறவுனிலை 
இந்த வெற்றிலை !


கும்பகோணம் வெற்றிலை
உலகப் பெயர் பெற்றது
இதை அறிய
சுவைத்து பார்த்து
சொன்னால் 
எனது கவிதைக்கு
நீங்கள் தரும் 
வாழ்த்து மாலை!

4 கருத்துகள்:

  1. வெற்றிலை நம்ம நாட்டுப்பொருள்...இதையும் நம்ம பயளுங்க கோட்ட விட்டுடானுங்களா....நம்ம நாட்ட கொள்ளையடிக்கிறதுக்கெதான் இவனுங்களுக்கு நேரம் பத்தமாட்டேங்குதே..... இந்த பயளுங்கள ஒழிச்சாதான் பாரதம் உருப்படும்....

    பதிலளிநீக்கு
  2. ''...விதைகள் இல்லாத
    கொடித்தாவரமே
    இந்த வெற்றிலை!
    இதன் காம்புகளை
    வெட்டி பதியம் போட்டாலே
    வளரும் இந்த இலை !...'''
    good info. vaalthukal.
    Vetha. Elangathilakam.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. sirippousingaram நன்றி உங்கள் கருத்துக்கு

    பதிலளிநீக்கு