28 டிச., 2012

விடியாமலே...





சொன்ன வாக்கும் 
நாங்கள் போட்ட வாக்கும் 
மறந்த நிலையில் நாங்கள்
===================

இரண்டு மணி நேரம் 
இருண்ட தமிழகம்
அறிந்தும் ,சொல்லியும்...
இன்று இன்னும் 
விடியாமலே...

27 டிச., 2012

அவநம்பிக்கை...




பாகனுக்கு
பணத்தை பெற்று 
கொடுத்தது யானை...

கொடுத்த பொருளுக்கு 
ஆசிர்வாதம் தந்தது 
தும்பிக்கை...

காலில் விலங்கோடு 
யானை
மனிதனுக்கோ 
அவநம்பிக்கை...

24 டிச., 2012

காதல் தீ...




வாலிபத்தின்
கட்டாயக்கல்வி...

பார்த்தால் போதும்
பற்றிக்கொள்ளும்
காதல் தீ...

அணைக்க தான்
ஆளில்லை
இருந்தாலும் தொடரும்
ஒருதலையாய் 


இருவகை...


கேட்பதை கொடுக்கும்
நிலை
பெண் குழந்தைக்கு 
அப்பாவும் 
ஆண் குழந்தைக்கு 
அம்மாவும் 
அடைக்கலம்...

வேண்டியதை  பெற 
சண்டை அம்மாவிடம்
ஆண் குழந்தை...

கேட்டதை பெற 
சிரிப்புடன்  அப்பாவிடம் 
பெண் குழந்தைக்கு...

படம் சொல்லும் கவிதை ...
















வேலையின் ஆதிக்கம் 
இந்த நிலையின் 
கோலம்....
=======================
வேலையோடு வேலை 
சூழ்நிலை தந்த நிலை...


வேடிக்கை என்பது 
இளசுகளின் வாடிக்கை 


கிடைக்கும் நேரத்தில் 
ரசிக்கும் வேலை ...
========================


12 டிச., 2012

ஞாபகங்கள்...




ஞாபகத்திற்கு  மட்டும் 
மறதியும் பொய்யும் 
தெரியாது...


ஞாபகங்கள்
சொன்னது நேற்றைய 
நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன்...

என்னை கண்டு 

ஒழிந்துக்கொண்ட 
நபரை பார்த்தவுடன் 
ஞாபகங்கள் சொன்னது 
பழைய உறவுகளை...

அழியாத 

சுவடுகளாய் 
ஞாபகங்கள் தொடரும் வண்ணமாய் 
இன்னும் மனதில்...

இன்பமும் துன்பமும் 
இணைந்த 
இரு கோடுகளாய்....

9 டிச., 2012

ஆசை...


வாழ்வின் மீது 
மனிதனுக்கும்...

பொய் மீது 
கவிஞ்சனுக்கும்...

காதல் மீது 
வாலிபத்துக்கும்...

பதவி மீது 
அரசியல்வாதிக்கும்...

லஞ்சத்தின் மீது 
அதிகாரிகளுக்கும்...


ஆசை துறக்க 
ஆசை
புத்தருக்கும்....
==============

6 டிச., 2012

அப்பாவின் முகம்...



அப்பாவின் சட்டையை 
போட்டுப் பார்த்த போது
அப்பாவின் வாசனை...

எனது மகனை 

பள்ளியில் விட்டபோது 
அப்பாவின் நினைவு...


எனக்கு அறிமுகமில்லாதவர் 
விருந்துக்கு அழைத்தார் 
அப்பாவின் உறவு என்று...

மரித்த பின்னும்

ஒவ்வோன்றிலும் 
மறையாத முகமாய் 
அப்பாவின் முகம்...


மெல்லிய மலர்கள்...




இரவோடு உலாப்போன 
மேகம் எழுதிய கவிதைகளை 
மறைக்கமுடியவில்லை 
மலர்கள் மேல் 
மழைத்துளிகள்...
==============================
கொட்டியது மழை 

மரணிக்கவில்லை 
ஜனித்தது
மெல்லிய மலர்கள்...
===============================
இரவு  தூறிய தூறலை 
மண்ணும்
மலரும் 
காட்டிக்கொடுத்தது...
===============================

உன்னை நனைத்தாலும் 
நனைத்த துளி 
விழுந்ததாலும்

மழைக்கும் 
மலருக்கும் 
பெருமிதம் ....
==============================



30 நவ., 2012

பொம்மைகளும் அழுகிறது...


பொம்மைகளும் அழுகிறது 
வீட்டில் குழந்தைகள் 
இல்லாததை எண்ணி...


பள்ளிக்கு போகும் 
குழந்தைகள் பை பை 
காட்டவில்லை என்று 
பொம்மைகளுக்கு கோபம்...

பிள்ளைகள் வந்த பின்னும் 
இன்னும் பேசவில்லையாம் 
குழந்தைகள் புகார்....

28 நவ., 2012

காலமாற்றம்....













மகனை சுமக்க 
சுமையில்லை 
அந்த அம்மாக்கு 
வீட்டில் இடமில்லை....
======================
பிள்ளைகள் பெறவில்லை 
மலடி என்றார்கள் 
பிள்ளை பெற்றதால் 
போடி என்றார்கள் 
முதியோர் இல்லத்துக்கு...
=========================
அம்மா இறந்தாதால் 
வீட்டில்  அப்பா 
அனாதை.....
==========================

25 நவ., 2012

தினம் தினம்...


சிவந்தது வானம்
மலர துடித்தது
அல்லி...
நிலவின் வருகைக்கு
முன்னும்

அள்ளிக்கொள்ள
மனமும்
தூக்கத்தின் துக்கத்தில்
கண்களும்
நிலவின் வருகைக்கு
பின்னும்...

தினம் தினம்
மாறாத குணம்....

24 நவ., 2012

குடைகள்....



அழுக்கும் 
சுத்தம் செய்கிறது 
வேலைக்காரி...
==================
எங்கோ பெய்த மழையை 
காட்டிக்கொடுத்தது 
மண்வாசனை...
====================
மழைக்காலத்தில் 
நடக்கும் காளான்கள் 
குடைகள்...
=======================
மழையில் பூத்தது 
கறுப்பு பூக்கள் 
குடைகள்...
=======================

23 நவ., 2012

மலரை வைத்து...

















மலரை வைத்து 
வாசனை உணரலாம் 
எதனை வைத்து 
உன் மனதை அறியலாம் ?
=======================
மல்லிகையும் 
ரோஜாவும் அழகானது 
நீ சூடிய பின்தான்....
========================
கட்டிய மாலை 
அருகில் நீ நின்றால் 
மலரும் பொறாமை 
படுகிறது உன் 
அழகை கண்டு....
===========================

22 நவ., 2012

பனி...











புல்லுக்குள் 
வைரங்கள் 
பனித்துளிகள்....
================
மழை மறந்து போனாலும் 
மறக்கமால் இறங்கியது 
பனி....
=========================
வெள்ளை சுவருக்குள் 
என்னை மறைத்தது 
பனி...
==========================
காலை நடைப்பயணம் 
மறைத்துக்கொண்டது 
நண்பனை பனி...
==========================
இலைகளின் 
இலவச குளியல் 
பனித்துளி...
==========================

21 நவ., 2012

நிழல்...



ஒளிக்கு மட்டுமே 
உறவு 
நிழல்...
===================
தண்ணீரிலும் 
நடக்கலாம் 
நிழலாய்...
===================
என்னை கைப்பிடித்து 
அழைத்துவந்தது 
நிலா..
===================
சூரியன் சந்திரன் 
பிம்பத்தில் 
ஓவியம்...
===================

நானே...













மழையோடு சிலகாலம் 
பழகி ரசிக்கலாம்...

குடைப்பிடித்து 
நடந்தாலும்...

அந்த தூறலில் 
உன்னை நனைத்து 
எல்லை மீறலாம்...

அந்த பலிக்கு 
நானே பலியாகலாம்...

  


19 நவ., 2012

ஆதிக்கம்....












கல்லுக்குள் ஈரம் 
சொல்லுக்குள் நெருப்பு 
இயற்கை...
=====================
கைக்குள் ஈரம் 
கொடுப்பதால் வாழும் 
மனித நேயம்...
===================
மேல் துண்டு 
கால் செருப்பு 
இடுப்புக்கும் கைக்கும்...
=====================
இயற்கையின் விளையாட்டு 
எனது கால்களில் 
அலைகளாய்....
=======================

17 நவ., 2012

குழந்தையின் குமறல் ...


















இரக்கமே இல்லாத 
இதயத்திடம் 
இருக்கவா முடியும்?


இரக்கமில்லா மிருகத்திடம் 
இறக்கதான் பிறந்தேன்...

இன்று நான் 
நாளை நீ 

வன்முறை முன் 
உன் வருகை 
வராமலா போகும்....



16 நவ., 2012

பின்னோக்கி பயணம்...














பின்னோக்கி பயணம் 
தொடர்கிறது
ஆதிவாசியாய்...

மின்சாரமில்லாமலும் 
விலைவாசி உயர்வாலும் 
பொய்க் கொண்டு எழுதும்
மனிதர்களாலும்...

ஜாதி மத 
இன 
வேற்றுமைகளாலும்...

மனித நேயத்தை
தேடிய வண்ணமாய்...

15 நவ., 2012

ஒரு கேள்வி...?




















மலரை தாங்கும்
இதயம்
இன்னல்கள் பல
வந்தாலும் உன்னை
நினைத்தே வாழும்


ரோஜாவை தாலாட்டி
முள்ளாய் மாறிய
இதயம்...



இதை அறிந்தால்
உன் உள்ளம்
குறைந்தாய் போகும்...?

விளம்பரம் மாயாஜாலங்கள் ...


இன்றைய விடுமுறை நாளில் தொலைக்காட்சி தான் நமக்கு பொழுது 
போக்கு... வேலையை விட்டு நிகழ்ச்சிகளை பார்த்தால் எல்லாம் 
தொழில் தான்...விளம்பரம் விளம்பரம் தான்...

போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது விளம்பரங்கள் மூலம் அவர்கள் பொருட்களை வாங்க அல்லது திணிக்க பார்க்கும் நிலை...

அதை எப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்...
நமக்கு பிடித்த நடிகர், நடிகை மூலம்...

இதுக்கு இந்த மீடியாக்கள்  போட்டிபோட்டுக்கொண்டு வித விதமாய் ஒவ்வொரு நிகழ்சிகளுக்கு பலமணி நேரம்  போட்டவண்ணமாய் இருப்பதை பார்க்கலாம்...

எப்படி நாம் பிழைக்க வேண்டும் என்று எண்ணும்  அளவுக்கு...
விடுமுறையின் போது தொலைக்காட்சிகள் நமக்கு விளம்பரங்கள் மூலம் சொல்லித்தருகிறது...

அடுத்து எல்லா விளம்பரத்திலும் 99%விழுக்காடு தூமையாக்கலாம்  
நன்றாக இருக்கும் என்ற முன் எச்சரிக்கை வேறு...

விளம்பரம்இங்கு  
வாங்கி விற்கப்படும்    
தொலைக்காட்சிகள்...

12 நவ., 2012

தீபத் திருநாளில்...



தீபத்தின் ஒளியில் 
வறுமை மறையட்டும் 

பட்டாசு சத்தத்தில் 
சாதி மதச்சண்டைகள் 
ஓடட்டும்...

அறியாமை விலகி 
அன்பு வளரட்டும் 

இல்லாமை இல்லாமல் 
இல்லங்கள் நிறையட்டும் 

மனித நேயத்தில் 
மனசுகள் மலரட்டும்...

இத்தனையும் 
இந்த தீபத் திருநாளில் 
கிடைக்க
எனது உள்ளம் கனிந்த 
வாழ்த்துக்கள்....

11 நவ., 2012

ஏன் ?


ஏன் ? என்ற  கேள்விகள் நமக்குள் கேட்க்கும் தினம் தினம் 
அதை தான் இன்று பார்வையில்...
நாம் பேருந்துகளில் பயணிக்கும் போது சில்லரை பாக்கி தராமல் இருக்கும் நடத்துனர்,அதை கேட்டால் நாம் என்னமோ அவரிடம் இனமாய் கேட்பது போன்ற பார்வை...நம்மிடம் இருக்கும் பொருளுக்கு சரியான அனுமதி சீட்டு தராமல் மேற்கொண்டு பணம் பெறுகின்ற நிலை...

நமது வீட்டு தொலைபேசி இணைப்பு பெறும்போதும் இல்லை சரிவர வேலை செய்யாத நிலையில் அழைக்கும் போதும்,அரசாங்க ஊழியர்கள் நம்மிடம் பணத்தை கேட்டு பெறுகின்ற நிலையை என்ன சொல்லுவது?

இவர்கள் அரசாங்கத்திடம் சம்பளம் பெறாமல் வேலை செய்கிறார்களா?
ஏன் நம்மிடனம் சிலர் இப்படி நடக்கிறார்கள்...
இப்படி கிடைக்கிற பணத்தை என்ன சொல்லுவது இனமாய் பெறுவதா ?
இல்லை லஞ்சமா இல்லை தானமா ?  

ஏன் ?நல்ல வேலையில் இருந்துக்கொண்டு இப்படி சிலர் நடக்கிறார்கள்?
ஏன் ஏன் என்று நமக்குள் இப்படி தோன்றும் கேள்விகள் ஏராளாம்...

அதில் இதுவும் ஒன்று...திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை 
ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டை எழுத்து போலதான் இவர்களும் 
தன்னை தானே உணராமல் போக்கும் வரை இது ஒரு தொடர்கதை....

8 நவ., 2012

யாரங்கே















யாரங்கே 
உலகத்தை 
மாசுபடாமல் 
சுற்ற விடுங்களே...

அதுவரை...?

5 நவ., 2012

யாருக்கு கேட்கிறது ?

தவறிப்போன நிலையில் 
யார் செய்த தவறு 
ஒத்த செருப்பு கேட்டதும் 

இன்னும் ஏன் 
நாங்கள் முதிர்கன்னிகளாய் 
இருக்கிறோம்...

என்று கேட்பது...


3 நவ., 2012

எனது ஆயிரமாவது பதிவு....



















எண்ணத்தை 
எடைப்போட்டு 
அதை வரிக்குள் 
அள்ளிப்போட்டு...

வெட்டு ஒன்னு 
துண்டு இரண்டு 
வெட்டிபோட்டு...

ஒவ்வொரு 
தலைப்பாய் 
கூறுப்போட்டு...

சிரிக்க
சிந்திக்க 
தந்த   நிலையில் 
படித்தது 
உங்கள் மனம்...

வளர்ந்தது எனது 
தளம் 

வண்ண வண்ணமாய் 
படங்களும் 
ஆயிரத்தில் அடங்கும்....

சொந்த எண்ணத்தோடு 
சில 
காப்பி பேஸ்டும் 
இதில் அடங்கும் ...

நனறிகள் நன்றிகள் 
சொல்லும் 
எனது உள்ளம் 

மழலை வாழை...,


















மழலையை 
தாலாட்டும் 
வாழை...
======================
சிரித்து 
மகிந்தன  
மழலை. வாழை...
======================
வாழையை 
வளைத்து பார்த்தான் 
வீரன்...
======================
மழலை 
வாலை சொன்னது 
வாழை...
========================

தீபாவளி



















வறுமைக்கு ஒரு நாள் 
விடுமுறை 
தீபாவளி...
---------------------------------------
தலைமுறை கதையை 
வரைமுறையோடு சொன்னது 
தீபாவளி...
---------------------------------------------
தலைமுறையாய் 
செய்முறை சொல்லும் 
தீபாவளி...
============================

1 நவ., 2012

மரமாய்....




















நன்றி மறந்த 
மனிதர்களை 
பார்த்தாலும்...

இன்னும் நிழலை 
தந்த நிலையில்
மரமாய் மனம்...

19 அக்., 2012

அழகு...

கல்லும் 
சொல்லும் 
கைவண்ணத்தில்...
===================
இடையிடையே 
சிரிக்கும் சிரிப்புமும் 
உன் இடையும்...
====================

தவழும் மழலையும்
காற்றோடு மழையும் 
பார்க்க பார்க்க...

15 அக்., 2012

வாழ்க்கை...


தலைமுறை 
வரைமுறை 
சொல்லும் வாழ்க்கை...

மழலை
இளமை 
முதுமை என்று 
பிரித்து காட்டும் 

அன்பை அனைத்து 
பாசத்தை நுழைத்து 
காதலை விதைத்து 
இன்பம் துன்பம் 
இரண்டும் தந்து 
மரணத்தை தரும்...

தணிக்கை அறிந்து
தனிமை உணர்ந்து 
திருமணம் கண்டு 
இருமனம் 
இரவு குணமறிந்து 
மழலை பெற்று...

இடக்கை அறியா வண்ணம் 
வலக்கை கொடுக்க...



நம்பிக்கைக் கொண்டு 
வாழும் நிலையே 
இந்த  வாழ்க்கை...




11 அக்., 2012

காதல் மாற்றம்














காதல் 
தோல்விக்கு காரணமாய் 
தாடி...
======================
காதல் தோல்வி 
ஆணுக்குவரலாறு 
பெண்ணுக்கு தகராறு...
=======================
தனக்காய் சொன்ன போது 
காதல் இனித்தது 
தங்கைக்கு யாரோ 
சொன்னபோது கொதித்தது
========================

பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான 13 பஸ்கள் பறிமுதல்: தனிப்படை போலீசார் இன்று நடவடிக்கை

மதுரை, அக். 11- 

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிரானைட் மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட கிரானைட் அதிபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். 

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஏற்கனவே சோதனை நடத்தி கிரானைட் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பி.ஆர்.பழனிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் இன்று காலை மாட்டுத்தாவணியில் உள்ள பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 13 பஸ்களை உடனடியாக பறிமுதல் செய்தனர். 

மேலும் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரானைட் ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தா வேஜூக்களை கடத்தவும் இந்த பஸ்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 13 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.-மெயில் அனுப்பினால் 3 ஆண்டு சிறை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, அக். 11-

பெண்களை ஆபாசமாக சித்தரித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் அனுப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இ-மெயில் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையடுத்து இந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பெண்களுக்கு ஆபாச மெயில் அனுப்பும் குற்றச்செயலில் ஈடுபடும் நபருக்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும் முதல் முறையாக இக்குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்ச அபராதம் 2000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். ஒரு முறை தண்டனை பெற்று இரண்டாவது முறையும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இதேபோல் அபராதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படலாம்.