26 டிச., 2011

சிறுகதை புதுக்கவிதையில்.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு


அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு
மரங்கள்
குடைப் பிடிக்கும்


நிழல் பேசும்,

நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை 

வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.


நாளுக்கு நாள்

கோபம் கொண்டு
மரங்களை 

எதிரியாகவே  நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்...


வீட்டின் பெரியவர்
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன் பார்வையாலே எரித்தார்.


மரங்களும் 

வெட்டப்பட்டன
நிழல் விரட்டப்பட்டன
அழகு குறைக்கப்பட்டன
வெப்பம் ஏற்கப்பட்டன.


தவறை 

எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு
என இன்று உணர்கிறார்...


அவசரத்தின் நிலை 

நம்மை
காலக்காலமாய்

கலங்கவைக்கும்
மன அமைதியை கெடுக்கும்
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!

சிறுகதை புதுக்கவிதையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக