29 டிச., 2011

காதலை கொல்!


காதலர்களே நில்லுங்கள்!
என் கேள்விக்கு பதில்
சொல்லுங்கள்!

வாங்கும் சம்பளத்தில்
தனக்கு என வாங்காமல்,
உங்களுக்கு 

வாங்க மறக்காமல்,
இருக்கும் உங்கள் தந்தை!

நீங்கள்  
தும்மினாலும்
துடித்துப் போகும் 
உங்கள் தாய்!

பாசத்தை கரைத்து
உங்கள் மீது பூசும் 
உங்கள் அக்காள்,
தங்கைகள்...

இப்படி அன்போடு வாழும்
இல்லத்தை விட்டு,
எப்படி ஓடிப்போக 

எண்ணம் உங்களுக்கு...

காதல் கொண்டு 
கறைகளோடு வாழ்க்கை 
எதற்கு...

காலம் காலமாய் 
உங்கள் குடும்பத்துக்கு 
வேண்டுமா இழுக்கு...

அப்படி என்னதான் 
காதலில் ஈர்ப்பு 

 
கண்கள் சொல்லும் 
போலிக் காதலைவிட 
உங்கள் இதயத்தை விட 
உங்கள் இல்லம் சிறப்பானது!

உங்கள் இருவருக்கும் 
இல்லமிருக்கு
அங்கும் இதயமிருக்கு...
காதல் கொள்!

இதுதான் 
உண்மைக் காதல்
என்பதை புரிந்துக்கொள்!

உண்மையை 
உணர்ந்துக்கொள் 
குடும்பத்தை 
நினைத்துக்கொள் 
இளமையில் 
காதலை கொல்!

2 கருத்துகள்:

  1. மிக மிக அருமை ஒருதந்தையாக எழுதி உள்ளீர்கள் .......

    ...பாராட்டுக்கள்.

    காதல் கண்னை மறைக்கும் போது பாசம் புரிவதில்லை

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மறுமொழிக்கும் நன்றி நன்றி .

    பதிலளிநீக்கு