20 டிச., 2011

புது அவதாரமாய் பொய்...



பொய் யென
நினைத்தால் 
பெய்யும் பொய் 

கண்களால் 
கண்டதும் 
காதால்
கேட்டதும் 
பொய்யென்று 
தெரிந்தாலும் 

தீர சேகரித்து 
மெய் யென சொல்லும் 
பொய்.


பொய்க்கு 
வார்த்தைகள் 
கோர்த்து 

பலப் பல
வண்ணமிட்டு
புன்னகை தொடுத்து 
புது அவதாரமாய்...

ஒப்பனை செய்து
நிஜமாக்கிக் 
கொள்கிறோம்.
உண்மையை 
கொல்கிறோம்

மனிதத்தையே 
குழித் தோண்டி 
புதைக்கிறோம்...


அனுதினம் 
சொல்லும் சில 
பொய்களும்...

2 கருத்துகள்: