26 நவ., 2011

கருச்சிதைவு


இன்பத்தின் 
மொழிகள் 
பேசி சிரிக்க...



இரவை 
அழைத்தது 
உறவு 




ஆலிங்கனத்தின் 
துணையோடு 
பயணம்...


நாளும் பந்தம் 
தொடர 
முளைத்தது...


முளைத்ததை 
சிதைக்க 
வாக்குவாதம்...


முடிவில் 
சிதைக்கப்பட்டது 
யார் என்றும்...
கொலை என்றும் 
அறியாமலே...


வருங்காலத்தை 
திட்டமிட்டு 
வரும் முன் 
தடுக்காமல் 
வளர விட்டு...


விதைக்கும் முன் 
யோசிக்காமல் 
புது உயிர் 
கொலையானது 
கோழைகளால்...

1 கருத்து: