24 நவ., 2011

பொய்கள்...




வித விதமான பொய்கள்
வீடுக்கு வீடு பேசப்படும்.


தெருவுக்கு தெரு
உண்மையாய் 
வாசிக்கப்படும் 

காதலில் 
கவிதையாய் 
நேசிக்கப்படும் 

நீ அழகானவள் 
என்று சொல்லியே 
காதலிக்கப்படும் 

விடுமுறைக்காக 
அலுவலகத்தில் 
முன்னுரைக்கப்படும்...

பொய்கள் கூட 
சில சமயம்
ரசிக்கப்படும்.

பொய்கள் கூடி 
பொதுக்கூட்டம் 
நடத்தப்படும்...

அதிக பொய்களே 
ஆட்சிக்கு அழைக்கப்படும் 

காலத்துக்கு ஏற்ற பொய்கள்
பேசப்படும்
புதிய வகையில்
சுவைக்கப்படும் 
சுவாசிக்கபடும்

பொய்கள் 
உருமாறி
மெய்யாய்
பிறக்கப்படும்...

2 கருத்துகள்:

  1. ungalai mattumae annaa mudium intha maari thalaippu ezuthuvatharkkum ,,,,

    kavithai arumai annaa

    பதிலளிநீக்கு
  2. கலை தங்கையின் ஊக்கமான மறுமொழிக்கு நன்றி நன்றி .

    பதிலளிநீக்கு