18 அக்., 2011

ஆயுதம் நண்பனாய் இன்று !





மதத்தின் பெயரால்,
மொழியின் பெயரால்,
நாட்டின் பெயரால்,
விசுவருபம் எடுத்தது
ஆயுதம்!


பேரழிவு செய்திடவே
ஆறறிவு துணைப்போக
நிமிர்ந்து நின்றது...
ஆயுதம்!


ஆயுதமே ஆட்சி பிடிக்க,
மனிதன் மறந்தான், மனிதத்தை!
அணுவும் விண்ணில் பறக்க
ஆயுதம், மழையாய்  தூவியது!




அணு மழையில்,
கால் வேற,கை வேற
சிதைக்கப்பட்டு, ரத்தம் சிந்தி
மனிதன் மறைந்தான்!




குழந்தைகளும்,பெண்களும்,
பேதமில்லாமலே கொன்றான்!
எளியவரை,எதிரிகளை அழிக்க
மனிதன்    மாறினான்...
ஆயுதமாய்!




பூமி பொது சொத்தாம்,
சொன்னார்கள் அன்று
இந்த பூமிக்கே சண்டைகள்
நடக்கிறது இங்கு!

ஆறறிவு, அழிக்கவும்
துணையானது இந்த 
ஆயுதமே!
நானா! நீயா!
என்ற போராட்த்தில்...
ஆயுதமே 
இன்று நண்பனாய்...!


2 கருத்துகள்: