25 அக்., 2011

உறவாக உருவாகும்!



பச்சை நிற இலைகள்,
மஞ்சள் பூவுக்கு,
உறவானது!

மஞ்சள் பூவை ரசிக்கும்,
மனதுக்கு பச்சை நிறம்
அன்னியனானது!

மஞ்சள் பூவை ரசிக்கும்
ஆசாமிக்கு, பச்சை இலை,
வெற்று இலையானது,எதிரியானது!

குளத்தோடு,அதன் குலத்தோடு
இருந்தாலும்,பச்சை இலை
இடைஞ்சலானது.

இன்முகம் மறைகிறது,
இன்னமும் தொடருகிறது,
இதன் எதிரொலி!

வளரும் நிலை அறிந்து
தடுப்புக்கள்,கொடுத்து,
பச்சை இலை அழிப்புக்கள்!

பச்சை இலைகளை அழித்தாலும்,
எரித்தாலும்,எருவாகும்,
மீண்டும் உறவாக உருவாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக