21 செப்., 2011

இன்று தானே புரிகிறது...!




தலைவர்கள் கைது,
தொண்டர்கள் கொதிப்பு,
தீக்குளிப்பு !

திரைப்படம் பார்க்க,
கூடத்தில் நசுங்கி ரசிகன் இறப்பு.

ஊழல் போக்க உண்ணாவிரதம்,
அடி தடியாய் மாறியதில் ஐந்து பேர் பலி !

காதல் கைக் கூடவில்லை 
காதலர்கள் தற்கொலை !

சாமி ஊர்வலம் 
மதக் கலவரமானதில்,
ஆசாமிகள் மரணம் 

இன்று தானே புரிகிறது 
யாரும் தனக்காக 
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக