4 மார்., 2010

நிலவே...





நிலவே!
உன்னை தேடிப் பார்த்தேன்
எங்கு ஓடி ஒழிந்தாய்?

இரவின் ஒளியாய்
கவிதைக்கு ஒலியாய்
காதலுக்கு விழியாய்
உறவுக்கு வழியாய்
வலம் வந்தவளே!

இன்று உனக்கு விடுமுறையா ?
அம்மாவாசை என்னும்
வழிமுறையா ?
இதுதான் விதிமுறையா .

உன்னை காணமல் எனக்கு
இன்று தூக்கம் துக்கம் தான்.
நாளை வளர்பிறையாய்
வந்து விடு
மீண்டும் புதுக்கவிதை
சொல்லிவிடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக