6 மார்., 2010

மழை!





மழை!
இறைவன் தந்த
இயற்கைக் குளியல் இது
நம்மோடு உறவாடும்
உறவு இது!

மழையில்
நனைந்து நடந்துச் சென்றால்
அதன்
அழகை அறிந்துக்கொள்வாய்.
மேகம் தரும்
குளியலை சுகம் என ஏதுவாய்
பூமிக் கொள்ளும்
மகிழ்வினை பார்த்துக்கொள்வாய்.

குடை பிடித்து
நீயும் மழையை மறைக்கவேண்டாம்.


பூமி நனையும் போது
நீயும் நனைய மறுக்கவேண்டாம்.


இறைவன் தரும் பரிசு
இனி நீயும் ஒதுங்க வேண்டாம்.


மழையை போலவே
ஒரு அழகுயில்லையே.


மழையை பற்றி...
சொல்ல வார்த்தையில்லையே!

மழலையாய் நீ மாறி 
மழையோடு கொண்ட  உறவு!

மனதுக்குள் வந்து போகும் 
புது உற்சாகத்தை பாரு !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக