6 மார்., 2010

வீட்டின் அகதிகள்!



நம் வீட்டின்
உயிரின் முகவரிகள்!
இவர்கள்!


பிள்ளைகளிடம்
ஆயுள் கைதியாய்
போனவர்கள்!



இணையத்திலும்
இல்லாளிடமும் பேசும்
பிள்ளைகள்...

பெற்றோர்கள் இருப்பதை
மறந்தே போனார்கள்
இன்றைய மகன்கள் .

தனிமைப்பட்ட
பெற்றோர்கள்!
வீட்டின் அகதிகள்!

காலமும் களமும் மாறும்,
நாமும் தனிமைக்கு
தள்ளப்படுவோம்!

அறிந்துக்கொள்...!
அன்புடன் நடந்துக்கொள்.
பெற்றோகளே சொர்க்கம் 
என, புரிந்துக்கொள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக