6 மார்., 2010

விழிகளில் மழையாய்!





நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கும்
கணவன் மனைவியின் நிலை இந்த கவிதை!

ஊமை நாடகம் ஒன்று
பார்வையாலே நடக்குது இங்கு!
மௌனமே ஆசையாய்...


பூக்களின் கவிதையாய்,
அரங்கேற்றம் இன்று.

நான்கு பார்வைகள் கலந்து,
நலம் கேட்கும் பார்த்து ,
கேட்டதும்...


விழிகளில் மழையாய்,
அந்த துளிகளோ....
ஆசைகளின் மொழியாய்,
மாறிப்போகும் வேலை இது.



கனவுகள் எல்லாம் 
காட்சியாய் மாறும்  தருணம்.

கற்பனைக் காற்றுக்கள் 
அடிக்கும் நேரம்...

பிரிவு எனபது வேதனை தான்,
பிரிவுக்கு பின் கிடைக்கும் 
இன்பம், இனிய போதை தான்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக