4 மார்., 2010

சமாதானப்புறாக்கள்!





பூமிவுடைய சமஸ்தானத்தில்
சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்...
எங்கள்
சமாதானம்
சபை ஏற மறுக்கிறது!


பயத்தோடு திரும்பிகிறது.
சமாதானத்துக்காக நாங்கள்
தொடுத்த பூமாலைகள் கூட
ஜாதிவாரியாய் பிரிக்கப்பட்டு
பூக்களுக்குள்ளே,
சண்டை நாடக்கிறது!

ஜாதிகளும் ,மதங்களும்,
கட்சிகளும் ,
மனித நேயத்தை 
கொன்றுவிட்டதால்,
எங்களை,நேசிக்க யாருமில்லை.
மனித நேயம் மாண்டுவிட்டதால் 
நாங்களும் ஏதோ 
சமாதானப்புறாக்கள்,
என்ற பெயரில் வலம் வரும்
பறவைகள் தான் நாங்கள்!

2 கருத்துகள்: