4 மார்., 2010

வசந்தக்காலம்! ,அது இறந்தக்காலம்!

 
இதோ இவர்கள் 
வாழ்ந்த காலம்
வசந்த அந்தக் காலம்
அது இறந்த காலம்!
இனி வருவது அவசரக்காலம்!

கணினியோடு வாழும் நேரம்.
அதுப்போல் இருப்பது எக்காலம்?

வானம் தூவும் மழைக்காலம்,
வயல்களில் கதிர்கள் பேசும்.
காதலாய் காற்று வீசும்.
மீண்டும் வருமா அந்தக்காலம்!

மீட்டுத்தருமா வருங்காலம் ?
இதோ இவர்கள் வாழ்ந்த காலமே
வசந்த காலம் ,அது இறந்த காலம்!


அடுக்கு வீடுகளில் 
அடுக்கப்பட்டு
அடுத்த வீடுக்கும் 
உறவுல்லா கலிகாலம் 

ஆசைகளை துறந்தக்கோலம்
இதானே இன்றைய காலம் .
மகிழ்ச்சியை மறந்தக்கோலம்
நமக்கு இந்த நிகழ்காலம்
ஒரு இறந்த காலம்!
வருங்காலம் ??????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக