28 பிப்., 2010

உலகம் பார்க்கும் வியப்போடு!





உன் விரல்கள் ஐந்தும் மூலதனம்-என்று
உன் செயல்கள் அமையும் வண்ணம் உழைத்திடு!
உன்னால் முடியும் என்ற எண்ணம் -தோன்ற
உலகத்தில் வெற்றிக் கொடி ஏற்றிடு!

உழைப்பு என்றும் உன்னோடு -என்ற
உதிக்கும் கிழக்காய் இருந்திடு!
உண்மை பேசும் உறுதியோடு-வாழ்ந்தால்
உலகம் பார்க்கும் வியப்போடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக