26 பிப்., 2010

முருங்கை கீரை அரும் மருந்தாகும்.



முருங்கை கீரை
அதன் மகத்துவம் 
அறிவீரோ!


தாது பலத்துக்கும்
தூதுவாகும்.


ரத்த அழுத்தமும்
குணமாகும்!


கொழுப்புகள் கூட
கரைந்து போகும்.
சக்கரை நோயும்
குறைந்துபோகும்!


கண் பார்வை தெளிவாகும்.
நீ உணவாய் உண்டால்
நலமாகும்!


முருங்கை கீரை
அரும் மருந்தாகும்.
நம் வீட்டில்
முருங்கை வளர்த்தால்,
சில நோய்கள்
பயந்து போகும்!

இளகிய மரம்
காற்றுக்கு இணங்கிடும்.
நம் உடலுக்கு
பலம் தரும்
இதன் தந்திரம்.

உடலுக்கு முறுக்கு
தந்திடும் முருங்கை .
உடல் முழுதும்
பாய்ந்திடும் வேங்கை.


இரவுக்கு இது இனிப்பு
இந்த முருங்கையே
ஆண்மைக்கு உகப்பு 
இதன்  சிறப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக