22 பிப்., 2010

இந்த பூமிப்போல!



தாயே!
இந்த உயிர்
நீ தந்தது.

உடலும்

நீ தொகுத்தது.

பாசமென்னும் 
புத்தகத்தை 
வாழும் காலத்தில் 
உதிரத்தால் 
எழுதியவளே...


காலத்தால் 
அழியாத 
தாய்மையை 
கொண்டவளே...

உன் சிறப்பு 

எக்காலத்திலும் 
நிறம் மாறாது.
பாசமும் குணம்
மாறது...

உனது அன்பு 
என்னும்
புத்தகத்தை 

பார்த்தாலே போதும் 
மனதில் பதியும்



நான் இருக்கும் வரை 

இறக்கும் வரை...
உன் நினைவுகளும் 
நிழலாய் தொடரும் 
நிஜமாய் வாழும் 


நீ தந்த என் உயிரும்
உன்னையே சுற்றிவரும்.
இந்த பூமிப்போல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக