24 பிப்., 2010

அகதியின் ஆதங்கம்!





நாங்கள்
அடிமைகள் அல்ல
அகதிகள் !


ஒன்று தெரியுமா ?
நேற்றைய அதிபதிகளே...
இன்று  நாங்கள்   அகதிகள்!

உங்கள் நாட்டிற்கு வந்தது
அதிகாரத்தில் பங்கு
கேட்டு அல்ல!



உங்கள் அன்பான உறவுகளை
கேட்டு வந்திருக்கிறோம்.



இன்றைய நிலைக்கொண்டு ,
எங்க ஏழ்மையை கண்டு ,
எங்கள் வாழ்க்கையை
ஏலம் போடாதிர்கள்!


சோற்றுக்கு கையேந்தும்
பிறவிகள் அல்ல நாங்கள்.


எங்கள் சோகத்திருக்கு
வரலாறு உண்டு .


விடியலை நோக்கும்
விடுதலைக் கதிர்கள் நாங்கள்!


எங்களுக்காக எங்களையே
இழப்பதற்கு  தயங்காதவர்கள்.


எங்கள் இறப்புக்கூட
மற்றவர்களை காயம்படுத்தக் கூடாது
என்ற எண்ணம் கொண்டவர்கள்.


எங்கள் எண்ணம் எதிரியை நோக்கி...
அப்பாவி மக்களை அல்ல.


நாங்கள் தீவிரவாதி இல்லை!
பலமைவாதியும் அல்ல.
சீர்திருத்தவாதியும் அல்ல!


விடியலை நோக்கி
மண்ணுக்காக போராடும்
விடுதலைவாதி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக